×

இலை கட்சியினருக்கு அதிர்ச்சி தந்த கஞ்சா கருப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஆனிமுத்து போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகர் கஞ்சா கருப்பு தொகுதியின் சில இடங்களில் பிரசாரம் செய்தார். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பிரசாரம் செய்தபோது, ‘‘தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் (கரு.மாணிக்கம்) வெளியூர்காரர். ஆனிமுத்து உள்ளூர்க்காரர்’’ என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘அவர் ஒன்றும் வெளியூர் இல்லை. காங்கிரஸ் வேட்பாளரின் தந்தை பலமுறை போட்டியிட்ட தொகுதி இது’ என்றார். இதனால் கடுப்பான கஞ்சா கருப்பு பிரசாரத்தை தொடராமல் சென்று விட்டார். இதேபோல் தொண்டி பகுதியில் இவரது பிரசாரத்திற்காக பாவடி மைதானம் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் மக்கள் காத்திருந்தனர். ஆனால், புதுக்குடி, மாசக்தி புரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்துவிட்டு திருவாடானை சென்று விட்டார். இதனால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்தனர்….

The post இலை கட்சியினருக்கு அதிர்ச்சி தந்த கஞ்சா கருப்பு appeared first on Dinakaran.

Tags : Animuthu ,AIADMK ,Thiruvadanai ,Ramanathapuram district ,Ganja Karuppu ,
× RELATED திருவாடானை அருகே தீப்பிடித்து எரிந்த வைக்கோல்